Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 2, Verse 27

ஜாத1ஸ்ய ஹி த்4ருவோ ம்ருத்1யுர்த்4ருவம் ஜன்ம ம்ருத1ஸ்ய ச1 |

1ஸ்மாத31ரிஹார்யே‌ர்தே2 ந த்1வம் ஶோசி1து1மர்ஹஸி ||27||

ஜாதஸ்ய-----பிறந்தவருக்கு;ஹி—அதற்காக; த்ருவஹ—--நிச்சயம்; ம்ருத்யுஹு—--மரணம்; த்ருவம்—-- நிச்சயமானது; ஜன்ம—--பிறப்பு; ம்ருதஸ்ய—--இறந்தவருக்கு; ச—--மற்றும்; தஸ்மாத்—--எனவே; அபரிஹார்யே அர்தே—-இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையில்; ந—இல்லை.த்வம்—--நீ; ஶோசிதம்—--புலம்புவது; அர்ஹசி—பொருத்தமான

Translation

BG 2.27: பிறந்தவருக்கு மரணம் நிச்சயம், இறந்தவருக்கு மறுபிறப்பு தவிர்க்க முடியாதது. எனவே, நீ தவிர்க்க முடியாததை நினைத்து புலம்பக்கூடாது.

Commentary

ஆங்கிலத்தில், ஒரு பிரபலமான பழமொழி உள்ளது: மரணம் போல் உறுதி . பெஞ்சமின் ஃ பிராங்க்லின் கூறினார்: ‘வாழ்க்கையில் நிச்சயமானவை மரணம் மற்றும் வரிகள் மட்டுமே.’ வாழ்க்கையில் மிகவும் உறுதியான விஷயம் என்னவென்றால், ஒரு நாள் மரணத்தை சந்திப்போம். உளவியலாளர்கள் மரண பயத்தை வாழ்க்கையில் மிகப்பெரிய பயமாக வகைப்படுத்துகிறார்கள். பதஞ்சலியின் யோக தர்ஷனிலும், அபினிவேஷ் அல்லது என்னவானாலும் உயிர்வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வான தூண்டுதல், பொருள் அறிவின் ஒரு பண்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பிறந்தவருக்கு மரணம் தவிர்க்க முடியாதது. அப்படியென்றால், தவிர்க்க முடியாத ஒன்று இருக்கும்போது, ​​அதைப்பற்றி ஏன் புலம்ப வேண்டும்? மகாபாரதம் இதைப் பற்றிய ஒரு சம்பவத்தை விவரிக்கிறது:

பாண்டவர்கள் காட்டில் வனவாசம் செய்த காலத்தில், ஒரு நாள் அலைந்து திரிந்தபோது, ​​தாகம் எடுத்த ஐந்து பாண்டவர்களும் ஒரு ஏரியைக் கண்டனர். யுதிஷ்டிரர் பீமரிடம் தங்களுக்கு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். பீமர் ஏரியை அடைந்ததும், ஏரியின் உள்ளே இருந்து ஒரு யக்ஷ (அரை தேவலோக உயிரினம்) பேசத் தொடங்கியது, ‘நீ முதலில் என் கேள்விகளுக்குப் பதிலளித்தால் மட்டுமே நான் தண்ணீரை எடுக்க அனுமதிப்பேன்.' என்று கூறி அவரை உள்ளே இழுத்துக் கொண்டது. சிறிது நேரம் கழித்து பீமர் திரும்பி வராததால், கவலைப்பட்ட யுதிஷ்டிரர் என்ன நடந்தது என்று பார்க்கவும் தண்ணீர் எடுக்கவும் அர்ஜுனனை அனுப்பினார். அர்ஜுனன் ஏரியை அடைந்ததும், யக்ஷனும் அவரை எச்சரித்து, ‘உன் சகோதரனை நான் ஏற்கனவே பிடித்துவிட்டேன். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க முடியாவிட்டால் தண்ணீர் குடிக்க முயற்சிக்காதீர்கள்’ என்று கூறியது. அர்ஜுனும் கேட்கவில்லை, யக்ஷன் அவரையும் ஏரிக்குள் இழுத்துக்கொண்டது. மற்ற சகோதரர்கள், நகுல் மற்றும் சகதேவ், அவரைப் பின்தொடர்ந்தனர், ஆனால் அதே விதியை சந்தித்தனர்.

இறுதியாக, யுதிஷ்டிரரே ஏரிக்கு வந்தார். மீண்டும் ஒருமுறை, யக்ஷன், ‘நீ ஏரியிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டுமானால் என் கேள்விகளுக்குப் பதில் சொல், அல்லது உன் நான்கு சகோதரர்களை ஏரிக்குள் இழுத்துக்கொண்டது போல உன்னையும் உள்ளே இழுத்துவிடுவேன்.’ என்று கூறியது. யுதிஷ்டிரர் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒப்புக்கொண்டார். யக்ஷன் உண்மையில் மரணத்தின் வானக் கடவுள், யமராஜர், மாறுவேடத்தில் இருந்த. அவர் யுதிஷ்டிரரை அறுபது கேள்விகள் கேட்டார், அனைத்து கேள்விகளுக்கும் யுதிஷ்டிரர் சரியான பதில்களை அளித்தார். இந்தக் கேள்விகளில் ஒன்று: ‘இந்த உலகில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்ன?’ யுதிஷ்டிரர் பதிலளித்தார்:

அஹன்யஹனி பூ4தா1னி க3ச்12ந்தீ1ஹ யமாலயம்

ஶேஷாஹா ஸ்தி2ரத்1வம் இச்12ந்தி1 கி1மாஶ்ச1ர்யமத1ஹ ப1ரம்

(மஹாபா4ரத1ம்)

'ஒவ்வொரு நிமிடமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிருடன் இருப்பவர்கள் இந்த நிகழ்வைக் காண்கிறார்கள், ஆனால் ஒரு நாள் தாங்களும் இறக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இதைவிட ஆச்சரியமான விஷயம் என்ன?’

ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் விளக்குகிறார், வாழ்க்கை தவிர்க்க முடியாத ஒரு முட்டுச்சந்தாகும். எனவே, ஒரு அறிவாளி தவிர்க்க முடியாததைக் குறித்து புலம்புவதில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!